நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 2:42)

 உங்கள் அனைவர் மீதும் கர்த்தரின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக 

        பைபிள் - இன்று உலகில் வாழும் கோடி கணக்கான கிறித்தவர்களின் வேதபுத்தகம். தங்களின் அன்றாட வாழ்வில் எப்பொழுதும் தங்களுடன்  வைத்திருக்க விரும்பும் நூல், தேவாலயங்களில் வாசிக்கப்படும் கர்த்தரின் வேத வாக்கு,உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சிடப்படும் நூல் என்று பல சிறப்புகளை பெற்ற 2000 ஆண்டுகளுக்கும் மேலாக கிறித்தவர்களால் கர்த்தரின் கலப்பற்ற வேதம் என  நம்பப்பட்டு வரும் பைபிள் மனிதக் கரங்களால் மாற்றம் அடைந்து விட்டது என நான் கூறினால் நீங்கள் நம்புவீர்களா?